×

இறுதி சடங்கின்போது தந்தை, மகன்கள் மீது சரமாரி தாக்குதல் உறவினர் உட்பட 4 பேருக்கு வலை வந்தவாசி அருகே விபத்தில் தாய்-மகன் பலி

வந்தவாசி, பிப்.6: வந்தவாசி அருகே விபத்தில் தாய்- மகன் பலியானதால் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது தகராறு செய்து தந்தை, மகன்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய உறவினர் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி வசந்தா(55). இவர் சென்னையில் உணவு விடுதியில் வேலை செய்து வந்தார். வேலைக்கு செல்வதற்காக மேல்மருவத்தூரில் இருந்து ரயிலில் செல்வதற்காக பைக்கில் இவரது மகன் கார்த்தி(27) என்பவர் கடந்த 2ம் தேதி அழைத்து சென்றுள்ளார். அப்போது, வந்தவாசி மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை ராமாபுரம் கிராமத்தில் எதிரே வந்த வாகனம் மோதிய விபத்தில் இருவரும் பலியானார்கள். இந்நிலையில், இதற்கான இறுதிச் சடங்கு வெளியம்பாக்கம் கிராமத்தில் 3ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்(60), இவரது மகன்கள் சக்திவேல்(28), சிவா(25) ஆகியோர் சென்றனர். அப்போது உறவினர்களான லோகநாதன்(55), முனியாண்டி,
மணிகண்டன், சஞ்சய் ஆகியோரும் வந்திருந்தனர்.

அப்போது நடராஜனுக்கும் லோகநாதனுக்கும் சுடுகாட்டில் வாய்த் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது லோகநாதனுக்கு ஆதரவாக முனியாண்டி, மணிகண்டன், சஞ்சய் ஆகியோர் கும்பலாக சேர்ந்து நடராஜன் அவரது இரு மகன்களையும் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த நடராஜன் அவரது இரண்டு மகன்களும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நடராஜன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து நடராஜன் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள லோகநாதன் உள்ளிட்ட 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இறுதி சடங்கின்போது தந்தை, மகன்கள் மீது சரமாரி தாக்குதல் உறவினர் உட்பட 4 பேருக்கு வலை வந்தவாசி அருகே விபத்தில் தாய்-மகன் பலி appeared first on Dinakaran.

Tags : Barrage attack ,Velabandavasi ,Vandavasi ,Dinakaran ,
× RELATED ரூ.2 ஆயிரத்திற்காக கணவனை கொன்று...